விரைவில் கோடீஸ்வரராக விபரீத ஆசைகர்ப்பிணி மனைவியை நரபலி கொடுத்த கணவர்

புதுச்சேரி: புதுவை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32). இவரது மனைவி கிருஷ்ணவேணி (28). ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு கோயிலுக்கு செல்வதாக வெளியே சென்ற கிருஷ்ணவேணி, கரிக்கலாம்பாக்கம் காளிகோயிலில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: பெண்ணின் கணவர் அசோக்ராஜூம், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் கோவிந்தராஜூம் நண்பர்கள். சாமியார் அடிக்கடி அசோக்ராஜூவின் வீட்டுக்கு  வந்து சென்றுள்ளார். அப்போது சீக்கிரமே கோடீஸ்வரராக வேண்டும் என சாமியாரிடம், அசோக்ராஜூ தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

உடனே சாமியார் நான் உங்களை விரைவில் பெரும் பணக்காரராக மாற்றுகிறேன். அதற்குரிய பூஜை, மந்திரங்களை தொடர்ந்து செய்ய வேண்டுமென  கூறியுள்ளார். இதனை பெரிதும் நம்பிய கிருஷ்ணவேணியும், கணவருக்கு தெரியாமல், அவ்வப்போது சாமியாருக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக சிறப்பு பூஜைகளையும், சிறப்பு யாகங்களையும் செய்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு யாகம், சிறப்பு பூஜைகள் செய்தாலும் பணக்காரராக  முடியவில்லையே. வறுமை வாட்டுகிறது என சாமியாரிடம் அசோக்ராஜீ கூறி கதறி உள்ளார். இறுதியாக  நரபலி கொடுத்தால் செல்வந்தராகிவிடலாம் என  சாமியார், அசோக்ராஜூக்கு விபரீத ஆசையை தூண்டிவிட்டார். இதற்காக மனைவியை நரபலி கொடுக்க துணிந்துவிட்ட அசோக்ராஜூ, மனைவி கிருஷ்ணவேணியை காளிக்கோயிலுக்கு சாமியாருடன் அனுப்பி வைத்தார்.

அப்போது சாமியார், கிருஷ்ணவேணியிடம் உனது கணவருக்கு 2வது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீ சிறப்பு பூஜையை செய்தால்தான் அவர் உன்னையே சுற்றி வருவார் எனக்கூறி அழைத்து ெசன்றுள்ளார்.   ஏற்கனவே காளிக்கோயிலில் சாமியார் கோவிந்தராஜுக்கு உதவியாக பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர் மற்றொரு நபர் என 3 பேர் அங்கு இருந்துள்ளனர். கிருஷ்ணவேணியை கையில் எலுமிச்சை பழத்தை வைத்தபடி கண்ணை மூடி தியானத்தில் இருக்குமாறு கூறியுள்ளனர். அப்போது பின்னால் நின்று கிருஷ்ணவேணியை ஆட்டை பலி கொடுப்பது போன்று கத்தியால் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர். கிருஷ்ணவேணியிடம் இருந்த நகைகளை சாமியார் எடுத்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்த கணவர் அசோக்ராஜூ, திருவண்ணாமலை சாமியார்  கோவிந்தராஜ, பெயிண்டர், தனியார் கம்பெனி ஊழியர், மற்றொரு நபர் ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

சாமியாரிடம் இருந்து தப்பித்த குழந்தைகள்

சாமியாரிடம் சென்ற அசோக்ராஜூ எந்த பூஜை  செய்தாலும், பணம் வரவில்லை. உடனே செல்வம்  சேர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாமியாரும், புரட்டாசி மாதம் காளிகோயிலில்  நரபலி கொடுத்தால் நீ சீக்கிரமே பணக்காரர் ஆகிவிடலாம் என தெரிவித்தார்.  மனைவிக்கு தெரியாமல் குழந்தைகளை நரபலி கொடுக்கலாம் என முதலில் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை சாமியாரிடம் தெரிவித்தார். உடனே குழந்தைகளை விட கர்ப்பிணியை நரபலியாக கொடுத்தால் கூடுதல் செல்வமும் சிறப்பும் வந்து சேரும் என ஆசையை தூண்டி உள்ளார். சாமியார் கோவிந்தராஜை கிருஷ்ணவேணி சித்தப்பா என பாசத்தோடு அழைத்து வந்துள்ளார். இறக்கும் அன்று கூட, தனது கையில் பேனாவால் சித்தப்பா கோவிந்தராஜ் என கிருஷ்ணவேணி எழுதி வைத்திருந்துள்ளார்.

கை, காலை கட்டிய சாமியார்

நரபலிக்கு முன்பு கிருஷ்ணவேணியின் கை, கால்களை கட்டுவதற்கு சாமியார் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் ஏன் என்னுடைய கை, கால்களை கட்டுகிறீர்கள் என கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். அதற்கு சாமியார், நீங்கள் தியானத்தில் இருக்கும்போது கையில் இருக்கும் எலுமிச்சை பழம், பூஜை பொருட்கள் கீழே விழுந்துவிடும். அதற்காக கட்டுகிறோம் எனக்கூறி கட்டி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: