மண்ணெண்ணெயை வாயில் வைத்து நெருப்பை ஊதிய மாணவன் தீயில் கருகி பரிதாப சாவு - விளையாட்டு விபரீதமானது

சென்னை,: ஊரப்பாக்கத்தில் பள்ளி மாணவன் வாயில் மண்ணெண்ணெய் வைத்து தீப்பந்தம் மூலம் தீ ஜூவாலையை உருவாக்க முயற்சித்த போது மண்ணெண்ணெய் சிதறியதில் தீப்பொறி பட்டு தீப்பிடித்ததில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்சன் (45). இவர், சென்னை மீனம்பாக்கத்தில் ஒரு தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, செம்மஞ்சேரியில் ஒரு அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஜெபின் (16), சென்னை சேத்துப்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், திருவிழாக்களில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, கையில் வைத்திருக்கும் தீப்பந்தத்தை ஊதி, மிகப்பெரிய தீ ஜுவாலையை உருவாக்குவது போல், நேற்று முன்தினம் மாலை ஜெபின் விளையாட்டாக தனது வீட்டுக்குள் முயற்சித்து கொண்டிருந்தார்.அப்போது ஜெபின் வாயில் கொப்பளித்த மண்ணெண்ணெய், திடீர் என அவரது உடல் முழுவதும் சிதறியது. இதையடுத்து அவரது கையில் வைத்திருந்த தீப்பந்தத்தில் இருந்து நெருப்பு பொறி அவரது உடல்மீது பரவியது. இதனால் அவர் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஜெபினை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெபின் பரிதாபமாக உயிரிழந்தான். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: