சென்னை,: ஊரப்பாக்கத்தில் பள்ளி மாணவன் வாயில் மண்ணெண்ணெய் வைத்து தீப்பந்தம் மூலம் தீ ஜூவாலையை உருவாக்க முயற்சித்த போது மண்ணெண்ணெய் சிதறியதில் தீப்பொறி பட்டு தீப்பிடித்ததில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்சன் (45). இவர், சென்னை மீனம்பாக்கத்தில் ஒரு தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, செம்மஞ்சேரியில் ஒரு அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஜெபின் (16), சென்னை சேத்துப்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஜெபினை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெபின் பரிதாபமாக உயிரிழந்தான். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.