2வது டி20 மழையால் ரத்து

கொழும்பு,: இந்தியா - இலங்கை மகளிர் அணிகளிடையே நடைபெற்ற 2வது டி20 போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது.கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 7.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்த நிலையில் மழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. யசோதா மெண்டிஸ் 1, கேப்டன் ஜெயாங்கனி 21, கவிஷா திலாரி 3 ரன்னில் வெளியேறினர். சுராங்கிகா 15, கவுஷல்யா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அருந்ததி, தீப்தி, பூனம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து மழை கொட்டியதால் ஆட்டம் தொடர முடியாத நிலை ஏற்றபட்டதை அடுத்து, முடிவு இல்லாத போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: