×

சாதி பிரச்சனையை தூண்டியதாக கருணாஸை கைது செய்ய சூலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை : சாதி பிரச்சனையை தூண்டியதாக கருணாஸை கைது செய்ய சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் வலியுறுத்தி உள்ளார். மேலும் சின்ன பையன் கருணாஸ் அடக்கி வாசிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும், இல்லையெனில் ஆயிரம் கருணாஸ் உருவாகிவிடுவார்கள் என்று கூறினார். இதனிடையே தைரியம் இருந்தால் கருணாஸ் தம்மை அடித்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்த அவர், சர்ச்சைப் பேச்சை கருணாஸ் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The Sulur MLA urges to arrest Karunas for provoking the caste issue
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்