திருப்பூர்: தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் மக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உடுமலைபேட்டை அருகே கோலார்பட்டியில் பேசிய டிடிவி தினகரன் அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழலும், முறைகேடுகளும் விரைவில் அம்பலத்திற்கு வரும் என்று தெரிவித்தார்.