கமல்ஹாசன் தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நேரத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருகிறார் என்றும், தேர்தல் களத்திற்கு கமல் வந்தால் அவரை சந்திக்க தயார் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதே வேளையில் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அவரது இந்த நிலைப்பாடு குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: