டான்சானியாவில் 300 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்து : 44 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

டான்சானியா: ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. வன்ஸா மாவட்டத்தில் உள்ளது விக்டோரியா ஏரி. ஆப்பரிக்காவின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் இந்த ஏரியில் படகு ஒன்றில் 300 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமான ஆட்கள் மற்றும் சோளம், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களையும் ஏற்றிச்சென்ற அந்த படகு பாரம் தாங்காமல் தலைக்குப்புற கவிழ்ந்து நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து மீட்பு பணியில் வன்ஸா மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 44 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 1996-ம் ஆண்டு இதே விக்டோரியா ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: