கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், வங்கி கணக்கில் முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக புதிதாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த 1957ம் ஆண்டு முதல் பார்சியன் தேசிய கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. பிரதமராக நஜீப் ரசாக் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வியடைந்தார். எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த மகாதிர் பிரதமராக பொறுப்பேற்றார். நஜீர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதே அவர் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மகாதிர் பொறுப்பேற்ற பின்னர் நஜீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டது.