டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஜின்ஷோ அபே, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவராக 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜப்பானில் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் தலைவராக உள்ள ஜின்ஷோ அபே, கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராக இருந்து வருகிறார். நேற்று இக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதமர் அபேயும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷிகரு இஷிபாவும் போட்டியிட்டனர். இதில், பெருவாரியான வாக்குகளை பெற்று அபே வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 807 வாக்குகளில் 553 வாக்குகள் அபேவுக்கு கிடைத்தது. இதன்மூலம், 70 சதவீத வாக்குகள் பெற்ற அபே, கட்சியின் தலைவராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.