இது நமக்கு தொழில் அல்ல முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம்: தொண்டர்களுக்கு கமல்ஹாசன் திடீர் அறிவுரை

காங்கயம்: ‘‘அரசியல் நமக்கு தொழில் அல்ல, மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம்’’ என கமல்ஹாசன் அறிவுறுத்தினார்.  திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதி போன்றவை உங்களுக்கு இருக்கிறதா? அவை இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும் உங்கள் கிராம சபைகள், அவைகளில் உங்கள் பங்கீடு பலமாக இருக்க வேண்டும்.  மக்கள் நீதி மய்யத்தின் பங்கீடு மட்டும் மல்ல, மக்களின் பங்கீடும் தேவை. திருவிழா போல கிராம சபைகளை நடத்த வேண்டும். அங்கே எழுப்பப்படும் கேள்வி எந்த கோர்ட்டையும் அதிரவைக்கும். நீங்க அரசியலில்  முழுநேரமாக ஈடுபட வேண்டியதுதானே, ஏன் நடுவுல டிவி நிகழ்ச்சி பண்றீங்க எனக் கேட்கிறார்கள். அவரவருக்கு தொழில் வேண்டும், அரசியல் தொழிலாக இருக்கக்கூடாது. அரசியல் தொழிலாக ஆனதால்  தான் பலபேர் அதையே வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அரசியல் தொழில் அல்ல, நாட்டுக்கு நாம் செய்யப்போகும் கடமை. நான் இந்த மேடையில் இருப்பவர்களிடமும் சொல்லிக் கொள்கிறேன், முழுநேரமும்  அரசியல் செய்ய வருகிறேன் என்கிறீர்கள்.

அது மக்கள் நீதி மய்யத்தில் நடக்காது. முழு நேரமும் தூங்குபவன் சோம்பேறி. முழுநேர அரசியல் செய்யுங்கள், முழுநேர அரசியல் செய்யுங்கள் என மற்றவர்களும் மக்கள் நீதி மய்யத்தை மிரட்டாதீர்கள். உங்களுக்கு முடிந்த  நேரத்தை அரசியலுக்கு ஒதுக்குங்கள். நம் எல்லோருக்கும் கடமை இருக்கிறது. இப்போது வாக்குறுதி கொடுப்பதற்கெல்லாம் நேரமில்லை. வேலை செய்வதற்கான நேரம் வந்து விட்டது. இவ்வாறு கமல் பேசினார்.போலீஸ் தடியடி: திருப்பூர் உஷா திேயட்டர் அருகே கமல்ஹாசன் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று இரவு 7.30 மணியளவில் நடந்தது. அந்த பாதையில் வாகனங்கள் ெசல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்து கமல்  புறப்பட்டதும், அவரது காருக்குப் பின்னால் தொண்டர்கள் வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். இதனால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: