சேந்தமங்கலம்: புரட்டாசி விரத மாதத்தால் மக்களிடையே இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிந்தது.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்ேபார் ஆடுகள், கிடா, குட்டிகளை விற்பனை செய்ய சந்தைக்கு ஓட்டி வருகின்றனர். இதை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் சந்தைக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.