சேலம்: தமிழகத்தில் 50,000 ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்து, பட்டுக்கூடு உற்பத்தி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்பத்தியாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, சேலத்தில் மண்டல பட்டுக்கூடு வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும், பட்டுக்கூடு வளர்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி ராஜகுமார் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 32 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், நமக்கு 38 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு தேவைப்படுகிறது. 6 ஆயிரம் டன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.