இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தக்குதல் நடத்தி வருகிறது. இது, இருநாடுகள் இடையேயான இடைவெளியை அதிகப்படுத்தியது. கடந்த 2015ம் ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்காததால், இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான்கான் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அமெரிக்காவில் இம்மாதம் நடைபெற உள்ள ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் அமைச்சர் மஹ்மூத் குரேஷியும் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.