19 நாளில் ரூ.3.83 அதிகரிப்பு .... பெட்ரோல், டீசல்விலையில் மாற்றமில்லை

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாற்றம் செய்யவில்லை. நேற்று வரை சென்னையில்  பெட்ரோல் ₹3.83, டீசல் ₹3.92 அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை 19 நாட்களில் சென்னையில் பெட்ரோல் ₹3.83, டீசல் ₹3.92 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்யவில்லை. இதுபோல் கடந்த 5 மற்றும் 12ம் தேதிகளிலும் விலையில் மாற்றம் இல்லை.இதனால் நேற்று பெட்ரோல் சென்னையில் ₹85.41, டெல்லியில் ₹82.16, மும்பையில் ₹89.54, கொல்கத்தாவில் ₹84.01  எனவும், டீசல் சென்னையில் ₹78.10, டெல்லியில் ₹73.87, மும்பையில் ₹78.42, கொல்கத்தாவில் ₹75.72 என விற்கப்பட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் சென்னையிலும் விரைவில் ₹90ஐ எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: