ஆந்திராவில் 19 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு

அமராவதி: ஆந்திராவில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 19 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்து துறை தலைவர்கள், துறை செயலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் 18,450 காலி பணியிடங்களையும் நேரடியாக நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. குரூப் 1 பிரிவில் 182 பணியிடங்கள், குரூப் 2ல் 337, குரூப் 3ல் 1,670, காவல்துறை நிர்வாகத்தில் 3000, மருத்துவத் துறையில் 1,604 மற்றும் இதர துறைகளில் 1657 காலி பணியிடங்கள் நேரடி பணியமர்த்தலின் மூலம் நிரப்பப்படும். இதை தவிர 9,275 ஆசிரியர் பணியிடங்கள், 725 விரிவுரையாளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: