தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தலா 210 மெகாவாட் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். பழுது காரணமாக தற்போது 860 முதல் 890 மெகாவாட் வரையே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே 2வது யூனிட் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று 1வது யூனிட்டிலும் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் மிகை உற்பத்தி காரணமாகவே இரு யூனிட்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.