மேட்டூர்,:மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8,483 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 9,119 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக, விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 800 கனஅடியும் என மொத்தம் 2 2,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.42 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 110.58 அடியாக சரிந்தது. ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 8,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.