ராமேஸ்வரம் விடுதியில் தாய், மகள் தற்கொலை முயற்சி

ராமேஸ்வரம்: சென்னையை சேர்ந்த பெண் தனது குழந்தை மற்றும் தாயுடன் ராமேஸ்வரம் விடுதியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி முத்துமாரி (25). மகன் தினேஷ் (3). முத்துமாரி, மகன் தினேஷ், தாய் வேலம்மாள் (55) ஆகியோருடன், ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். வர்த்தகன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் 3 பேரும் அறை எடுத்து தங்கினர். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், போலீசாரின் உதவியுடன் அறையை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது 3 பேரும் மயங்கி நிலையில் படுத்துக் கிடந்தனர். போலீசார் அவர்களை, மீட்டு ராேமஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முத்துமாரி, தினேஷ் ஆகியோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரம் கோயில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முத்துமாரியின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளனர். பின்னர் முத்துமாரி தனது 3 வயது குழந்தைக்கும் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். இதற்கிடையில் முத்துமாரி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘‘கணவர் முத்துவேல் மற்றும் அவரது சகோதரிகள் என்னை கொடுமைப்படுத்தினர். ஆகையால் எனது மகன் மற்றும் தாயுடன் தற்கொலை செய்து கொள்கிறேன். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

மறுமணம் செய்தவர்

தூத்துக்குடிைய சேர்ந்த கணவரை இழந்த முத்துமாரி மகன் தினேஷூடன் வசித்து வந்தார். இவர், மனைவியை இழந்த முத்துவேலை  இரண்டாவதாக சில மாதங்களுக்கு முன்புதான் திருச்செந்தூர் கோயிலில் மறுமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: