செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. கடைகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் உடைப்பு, பெட்ரோல் குண்டு மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.இதையடுத்து, இரு பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மேலும் 4 வழக்குகள் பதியப்பட்டு இரு தரப்பை சேர்ந்த 16 பேரை செங்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.