சென்னை: சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் உபயோகிப்பதினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்திவருகிறது. நேற்று சென்னை மாநகராட்சி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து, வில்லிவாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சுமார் 850 மாணவியர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.