காசிமேடு: காசிமேட்டில் ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காசிமேடு, ஜீவரத்தினம் சாலையில் கடந்த 6 மாதங்களாக ஆட்டோக்களுக்கு காஸ் நிரப்பும் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் காஸ் நிரப்பும் நிலையம் திறந்தால், இதை சுற்றியுள்ள சிசி காலனி, காசிபுரம், ஒய்எம்சிஏ குப்பம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு காஸ் நிரப்பும் நிலையத்தை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே இப்பகுதி மக்கள் 2 முறை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.