பவானி ஆற்றை கடந்த போது நீரில் மூழ்கி பெண் தொழிலாளிகள் 2 பேர் பரிதாப சாவு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே  உள்ள ஆலத்துக்கோம்பை காலனியை சேர்ந்த 13 பெண் கூலித்தொழிலாளர்கள் நேற்று  செண்பகபுதூர் அருகே உள்ள மேட்டூர் கிராமத்திற்கு நாற்று நடவுப்பணிக்கு  சென்று விட்டு மாலை 4 மணியளவில் ஆலத்துக்கோம்பை செல்ல  அப்பகுதியில் உள்ள பவானி ஆற்றில் இறங்கி சென்றுள்ளனர்.  

தற்போது, ஆற்றில் ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது. இதனால், ஆழம் தெரியாமல், திடீரென 4 பேர் மூழ்கி மாயமானார்கள். இதைக்கண்ட  மற்ற பெண்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் உடனடியாக ஆற்றில்  குதித்தனர். இவர்களில் மல்லிகா (45), சரசாள் (55) ஆகியோரை மயக்கத்துடன் மீட்டனர். பின்னர், சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்களில் சரசாள் இறந்தார். மல்லிகா சிகிச்சை பெற்று வருகிறார்.  இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில், ஆறுமுகம் மனைவி பெரியமணி (55) என்பவரை சடலமாக மீட்டனர். பழனிச்சாமி மனைவி  வசந்தா (45) என்பவரை தேடி வருகின்றனர். மற்ற 10 பெண்களை கிராமத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: