சென்னை: பள்ளி மாணவியை ஆந்திராவுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆந்திரா சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தா (50) (பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது). இவர் நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘‘என் மகள் பள்ளி மாணவி. என் மகளை ஆந்திராவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் கடத்தி சென்று விட்டார். நாங்கள் பல இடங்களில் தேடி பார்த்த போது அவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருப்பது தெரியவந்தது. பிறகு எனது மகளை நாங்கள் மீட்டோம். அப்போது, அந்த சிறுவன் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.