×

ஆந்திராவுக்கு கடத்தி சென்று பள்ளி மாணவி பலாத்காரம்: தலைமறைவான சிறுவனுக்கு வலை

சென்னை: பள்ளி மாணவியை ஆந்திராவுக்கு கடத்தி  சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆந்திரா சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தா (50) (பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது). இவர் நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘‘என் மகள் பள்ளி மாணவி.  என் மகளை ஆந்திராவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் கடத்தி சென்று விட்டார். நாங்கள் பல இடங்களில் தேடி பார்த்த போது அவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருப்பது தெரியவந்தது. பிறகு எனது மகளை நாங்கள்  மீட்டோம். அப்போது, அந்த சிறுவன் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

எனவே, என் மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்’’ என்று  கூறியிருந்தார்.இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் கடத்தி சென்ற சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : School kidnapping, kidnapped , Andhra
× RELATED கோவையில் பயங்கரம்: பள்ளி...