சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்க வேண்டும் என்ற விதி கூட பின்பற்றப்படாமல், தமிழக அரசும், மின்வாரியமும் மெத்தனப்போக்காக இருந்ததே இன்றைய மின்வெட்டுக்கு அடிப்படை காரணமாகும். எனவே, தமிழக அரசும், மின்வாரியமும் மின்வெட்டை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.