16.5 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆந்திரா ஆசாமி கைது

சென்னை:  மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பார்ட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க  அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராமன் (42) என்பவர் சுற்றுலா பயணியாக மலோசியா சென்று திரும்பினார்.

அவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள்  எதையும் கொண்டு வரவில்லை என கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். இதனால், அவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும்  இல்லை. இதையடுத்து, வெங்கட்ராமனை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது, அவரது உள்ளாடைக்குள் 550 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தது, பறிமுதல் செய்தனர்.  இதன் சர்வதேச மதிப்பு ₹16.5 லட்சம். இதையடுத்து வெங்கட்ராமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: