இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி லண்டன் சொத்து வழக்கில் நவாஸ் ஷெரீப் விடுவிப்பு: மகள், மருமகனும் விடுதலை

இஸ்லாமாபாத்:இங்கிலாந்தின் லண்டன் நகரில் சொகுசு பிளாட்கள் வாங்கிய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் பொறுப்பு நீதிமன்றம், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம்  மற்றும் மருமகன் முன்னாள் கேப்டன் முகமது சப்தார் ஆகியோருக்கு கடந்த ஜூலையில் சிறை தண்டனை விதித்தது. இவர்கள் மூவரும் ராவல்பிண்டியில் உள்ள அடாலியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் மீதான ஊழல் வழக்கை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதி அதர் மினாலா தலைமையிலான அமர்வு, ஊழல் வழக்கில் மூவரின் தண்டனையையும் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: