தமிழகம் உட்பட நாடு முழுவதும் 198 அணைகளின் பராமரிப்புக்கு கூடுதலாக 1,244 கோடி நிதி

புதுடெல்லி: தமிழக அணைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 198 அணைகளின் பாதுகாப்பிற்காக கூடுதலாக ரூ.1244 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.உலக வங்கி நிதியுதவியுடன் நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை பராமரிக்க 2012 ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டது. இந்த பணிகளை 2018 ஜூன் மாதம் முடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.2100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ.1968 கோடி. மத்திய அரசின் பங்களிப்பு ரூ.132 கோடி. இந்த நிதி  அடிப்படையில் தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 198 அணைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடியாததால் 2017ல் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஆலோசனை நடத்தி பணிகளை முடிக்கும் அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி 2020 ஜூன் 30ம்  தேதிக்குள் பணிகளை முடிக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட அணைகளில் ஷட்டர் பழுது பார்த்தல், தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் நலனை பாதுகாத்தல், அணை  பாதுகாப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.இதற்காக நிதி கூடுதலாக தேவைப்படுவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நேற்று ஆலோசனை நடத்தியது. அதன்படி அணை பராமரிப்பு நிதி ரூ.2100 கோடியில் இருந்து ரூ.3466 கோடியாக உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1244 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: