திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோவிடம் நேற்று எர்ணாகுளம் குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்றும் அவரிடம் விசாரணை நடக்க உள்ளது.கேரள மாநிலம் குரவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகார் விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. இந்த வழக்கில்நேற்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு அவர் ஆஜராகவில்லை. 11 மணியளவில் பிஷப் பிராங்கோ குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். உடனடியாக கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் மற்றும் வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் விசாரணை தொடங்கியது. மாலை 6 மணிவரை தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. முதல் கட்டமாக 104 கேள்விகள் ேகட்கப்பட்டன. இதற்கு அவர் பதிலளித்தார். விசாரணை முடிந்து மாலை 6 மணியளவில் பிஷப் விடுவிக்கப்பட்டார்.