லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஒரு சாலை அழகுப்படுத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இம்மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவை முன்னிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் சார்பில் தலா ஒரு சாலை நவீன முறையில் அழகுப்படுத்தப்படும்.
இவற்றுக்கு ‘அடல் கவுரவ் பாத்’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்படும். அலகாபாத்தில் அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதியில் இருந்து மார்ச் 4ம் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள். வரும் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து கங்கையில் கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் கண்காணிக்கப்படும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி