கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் பறிமுதல்...

கடலூர்: கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது. ஹெச்.டி.எப்.சி வங்கி லாக்கரில் 4721 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு லாக்கரில் மேலும் 4 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அளவுக்கு அதிகமாக வாகன ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக வந்த வழக்கில் போலீசார் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் 2 வங்கி லாக்கரிலும் சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேறு வங்கிகளில் உள்ள லாக்கரிலும் மேலும் தங்கம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் அனைத்து வங்கி லாக்கர்களிலும் திறந்து பார்த்து சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: