11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

சென்னை: 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சர்க்கரைகழக மேலாண் இயக்குனராக ரீட்டா ஹரீஷ் தாக்கூர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்துறை கூடுதல் இயக்குனராக ஜே.விஜயராணி நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக இணை ஆணையராக கே.கற்பகத்தை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை கூடுதல் செயலராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் துறை கூடுதல் செயலராக பிங்கி ஜோவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை இணை ஆணையராக மேகநாதரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பொருளாதரம் மற்றும் புள்ளியில் துறை ஆணையராக அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையராக குமரவேல் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிஎம்டிஏ-வின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள மதிவாணனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மதிவாணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: