×

ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை: ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்பல்லோ தகவல்

சென்னை: ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை என்று அப்பல்லோ ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. சிசிடிவி சர்வர்களில் 45 நாட்கள் மட்டுமே காட்சிகள் பதிவில் இருக்கும் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 45 நாட்களுக்கு பின் சிசிடிவி காட்சிகள் தானாக அழிந்து விடும் என்று அப்பல்லோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யாததால் தலைமை நிர்வாக அதிகாரி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் இல்லாதது குறித்து செப்டம்பர் 25-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை மற்றும் தலைமை செயலாளருக்கு  ஆணையம் கடிதம்

ஆளுநர் மாளிகைக்கு எத்தனை மருத்துவ குறிப்புகள் வந்தன? குறிப்புகள் பெறப்பட்டிருப்பின் பொறுப்பு ஆளுநருக்கு அது தெரிவிக்கப்பட்டதா? மருத்துவமனையில் ஆளுநர் முதல்வரை பார்த்துவிட்டு சென்ற பின்னர் ராஜ்பவனில் இருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா? என்பது போன்ற விவரங்களை கேட்டு ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் விசாரணை பற்றி உங்கள் தரப்பு விளக்கங்களையும் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது

அரசுக்கு 4 கேள்விகள்

ஜெ., சிகிச்சை தொடர்பாக அரசுக்கு 4 கேள்விகளை ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CCTV footage, jayalalitha, Apollo hospital
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...