தனது ஆசைக்கு அடங்காத பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன்

துருக்கி : இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் எம்மா ஹிக்கின்சன் (37), அவர் தனது தோழியுடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவருக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்ஷல் (27) என்ற ஆண் நபர் அறிமுகமாகியுள்ளார். ஒரு நாள் இரவு தங்குவதற்கு இடமில்லை என மார்ஷல் கூறியதால் பரிதாபப்பட்ட அந்த இளம்பெண், வேண்டுமென்றால் எனது அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

 

அப்போது ஹோட்டலுக்கு சென்ற அவர் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். மார்ஷல் அங்கிருந்த ஷோபாவில் உறங்கினான். சிறிது நேரம் கழித்து மார்ஷல் அந்த பெண்ணிடம், தவறாக நடக்க முற்பட்டான். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், மார்ஷல் எம்மாவை கடுமையாக தாக்கினான்.

 

இந்த கொடூர தாக்குதலில் எம்மாவின் முகம் முழுவதும் சிதைந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடலில் 50 தையல்கள் போடப்பட்டது. இதனைஅடுத்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் மார்ஷலை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: