மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுளளனர். தனிப்படை போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய இருவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதாகவும், விடுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வாங்கி செல்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதனையடுத்து கல்லூரி விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அறை எண் 37, மற்றும் 76-ல் இருந்து 30-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கலைச் சேர்ந்த பழனிசாமி, தாமு, சுர்யா, விஜயா, வீரமாள் ஆகிய 5 பேர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: