மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுளளனர். தனிப்படை போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய இருவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதாகவும், விடுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வாங்கி செல்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதனையடுத்து கல்லூரி விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.