அமைச்சர் என்ற பொறுப்பில்லாமல் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார் : துரைமுருகன் ஆவேசம்

சென்னை: கலைஞருக்கு இடம் கொடுத்தது குறித்து அமைச்சர் என்ற பொறுப்புக்கு தகுதி இல்லாமல் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார் என திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமைச்சர் கடம்பூர் ராஜூ எவ்வளவு மோசமானவர் என்பது அவர் பேசிய பேச்சிலேயே நிரூபணம் ஆகியுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்து மறைந்திருந்தால் அந்த மெரினாவில் இடம் கிடைத்திருக்கும். ஆனால், மெரினாவில் இடம் கிடைத்தது அரசு போட்ட பிச்சை என்று கூறியுள்ளார். அவர் போட்டால் தானே பிச்சை. அவர் போடவில்லையே, . நாங்கள் மெரினாவில் இடத்தை நீதிமன்றம் மூலமாகவே பெற்றோம். ராஜாஜி ஹாலில் உடலை வைத்தது குறித்தும் பேசியுள்ளார். இவர்கள் இல்லை என்றால் என்ன எங்களுக்கு நீதிமன்றம் உள்ளது.  ராணுவ மரியாதையை இந்த அரசு கொடுக்கவில்லை. மத்திய அரசுதான் கொடுத்தது. இதுகூட தெரியாத ஒருவர் அமைச்சராகவே உள்ளார். கலைஞருக்கு இடத்தை கொடுக்கவில்லை என்றால் உள்நாட்டு கலவரம் வரும் என்று வக்கீல்கள் கூறியதால் தான் பயந்து அவர்கள் இடத்தை கொடுத்தனர். அதிமுக அமைச்சர்கள் யாரும் கலைஞருக்கு இடத்தை கொடுக்கவில்லை. கடம்பூர் ராஜூவின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இடம் கொடுத்ததில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. எங்களுக்கு தொல்லைதான் கொடுத்தார்கள். இவர்கள் போல் பேசியவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளார்கள். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: