கோலார்: மதுக்கடை உரிமையாளரை கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ. 3.5 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் ஆகியவற்றை பறித்து சென்ற 5 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் மதுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் இவரை வழிமறித்து காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தி இவரிடம் இருந்த ரூ. 3.5 லட்சம் ரொக்கம், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மோதிரம் உள்பட பொருட்களை பறித்துக்கொண்டு டேக்கல் அருகே கொண்டு வந்து விட்டு தப்பி சென்றனர்.