மதுக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.3.5 லட்சம் வழிப்பறி: 5 பேர் கும்பலுக்கு வலை

கோலார்: மதுக்கடை உரிமையாளரை கடத்தி சென்று அவரிடம் இருந்த ரூ. 3.5 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் ஆகியவற்றை பறித்து சென்ற 5 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் மதுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் இவரை வழிமறித்து காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தி இவரிடம் இருந்த ரூ. 3.5 லட்சம் ரொக்கம், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மோதிரம் உள்பட பொருட்களை பறித்துக்கொண்டு டேக்கல் அருகே கொண்டு வந்து விட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட இவர் அவ்வழியாக வந்தவர்களின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டேக்கல் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: