திருமுல்லைவாயில் CTH சாலையில் சாக்கடை ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதி

சென்னை: சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ளது CTH சாலை. போக்குவரத்து  அதிகமுள்ள பிரதான சாலையான CTH ரோட்டில் அமைந்துள்ள கிறிஸ்துவ இடுகாடு அருகே, சாலையிலேயே சாக்கடை நீர் ஓடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பிராதான சாலையிலேயே சாக்கடை ஓடுவதால் மக்கள் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். சாலையில் ஓடும் கழிவு நீரால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அவ்வழியே செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சாலையை கடக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இடுகாடு அருகே கழிவு நீர் லாரிகள் கழிவு நீரை அங்கேயே திறந்து விடுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். ஆவடி பெரு நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: