திருமங்கலம்: சேதமடைந்து காணப்பட்ட திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் பிளாட்பாரங்கள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் ரயில்களில் ஏற வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் பிளாட்பார நடைபாதைகளில் செல்லும் போது தடுமாற வேண்டியிருந்தது. இதனால் திருமங்கலத்தில் ரயில்வே பிளாட்பாரங்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.