ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை ஒத்தி வைக்குமாறு தமிழக அரசு கடிதம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை ஒத்தி வைக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 22 முதல் 24 வரை ஸ்டெர்லைட்டில் குழு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கு நிலுவையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆய்வு திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: