டமாஸ்கஸ் : சிரியாவில் 14 பேருடன் மாயமான தங்கள் நாட்டு போர் விமானத்தை ரஷியா தீவிரமாக தேடி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு ஆதரவாக ரஷியா படைகள் போரிட்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் சிரியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் 14 பேருடன் ரஷியாவின் Il-20 என்ற கண்காணிப்பு விமானம் ஒன்று சிரியா எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. பின்னர் நேற்று இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35கிமீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் வந்த போது திடீரென விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டு காணாமல் போனது.