சென்னை திருவொற்றியூரில் மணல் கடத்தல் - 26 லாரிகள் பறிமுதல், 30 பேர் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவன மேலாளர், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர் விம்கோ நகரில் விக்டோரியா எஸ்டெட் என்ற நிறுவனம், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் இடித்து வந்தது.

அந்த கட்டிடப் பகுதியில் ஆற்று மணல் இருப்பதை கண்ட ஒப்பந்த நிறுவன மேலாளர், தினமும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடத்தலில் ஈடுபட்ட 26 மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: