ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் என்று காங்கிரஸ் கட்சியினர் புகாருக்கு நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் என்று காங்கிரஸ் கட்சியினர் புகாருக்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்துள்ளார். ஐ.மு. கூட்டணி அரசு அளிக்க இருந்த விலையை விட குறைவான விலையில் வாங்க உள்ளோம் என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஐ.மு.கூ. அளிக்க இருந்ததை விட பா.ஜ.க ஆட்சியில் 9% குறைவான விலையில் ரஃபேல் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் கூறினார். விமானப்படையில் ஒரு ஸ்குவாட்ரனுக்கு 42 விமானங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விமானப்படையில் ஒரு ஸ்குவாட்ரனுக்கு 33-ஆக விமான எண்ணிக்கை 2013-லேயே குறைந்துவிட்டது என்றும் கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: