சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்தால், தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே முடியும் எனவும் தெரிவித்தார்.