ஆப்பிள் செல்போன் நிறுவன பொது மேலாளர் உட்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் : நெல்லை நீதிமன்றம்

நெல்லை: ஆப்பிள் செல்போன் நிறுவன பொது மேலாளர் உட்பட 5 பேருக்கு நெல்லை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தான் வாங்கிய ஐ-போன் சரியாக வேலை செய்யவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் மனுதாரருக்கு புதிய ஐ-போனும், ரூ.9 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டு அதை முழுமையாக வழங்காததால் ஆப்பிள் நிறுவன பொது மேலாளர் உட்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: