திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்

திருவாரூர்: முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை  ஊர்வலம் நடைபெறுவதையொட்டி அங்கு இருக்கக்கூடிய ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பாதுகாப்புக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி முத்துப்பேட்டை நகரம் முழுவதும் போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜர் தலைமையிலும் அதே போன்று தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில்  மற்றும் திருச்சி டி.ஐ.ஜி. லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளார்கள். ஜாம்பவான் ஓடை பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலமானது சரியாக 3:30 மணியளவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக 19 சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு வாமினி ஆற்றில் கரைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: