டெல்லி: பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின்னரும் இந்தியா குறித்த கொள்கையை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி.கே.சிங் பாகிஸ்தான் குறித்த கொள்கையில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றும், பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் இந்தியா குறித்த கொள்கையை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளவில்லை என்று சிங் விமர்சனம் செய்தார்.