சுற்றுலா உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் : இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்!

இங்கிலாந்து : இங்கிலாந்தில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது உயிரைக் கொள்ளும் நச்சுப் பொருட்களை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டில் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பரி நகரில் குவிவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று அங்குள்ள உணவகத்தில் இருவர் உணவருந்தி கொண்டிருந்த நிலையில், திடீரென மயக்கமடைந்து கீழே சரிந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையில், உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது நோவிசாக் என்னும் நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு ஆளானவர்களில் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நச்சுப்பொருளானது ரஷிய உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: