சேலம்: ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி எதற்கும் பயனற்றதாக உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறினார். அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.