நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் காக்காவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு வங்கியின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். லாக்கரை கடப்பாரையால் உடைத்தபோது அபாய அலாரம் ஒலித்தது. இந்த சத்தம் கேட்டவுடன் அந்த நபர்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அலாரம் ஒலித்ததால் வங்கியின் லாக்கரில் வைத்திருந்த 10 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் தப்பியது.